தங்கை
அலையும் கரையும் போன்றது
சொந்தம் எனும் சுவை இது!!!
புரியாத வயதில் கிடைத்த உறவை
சில நாள் பிரிந்த பின்பு புரிந்தது,
உயிர் தோழி எனும் உண்மை!!!
என் இன்பங்கள் அனைத்தும்
உன் சிரிப்பின் பிம்பங்கள்;
என் துன்பங்கள் அனைத்தும்
உன் மனதில் கடிதங்கள்.
சிறு வயதில்
பசியென்று சொல்லதெரியாமல்,
கண்ணீராய் கரைந்திடுவாய்.
இப்போது
பயமென்று பிறர் சொல்லிக் கேட்டாலும்,
அதனை சூத்திரமாய் வென்றிடுவாய்.
அனைவரும் வியக்கும் உன் உறுதி;
தமக்கையாய் நான் கொள்ளும் பெருமை.
பொறாமை பொறி தட்டும்
பிறர் வெற்றி கண்டால்!!!
என் கைகளும் தானாய்த் தட்டும்
அவை உனக்கு சொந்தமென்றால்!!!
No comments:
Post a Comment